Friday, 10 June 2011

பல வடிவங்களில் நீடிக்கும் தீண்டாமைக் கொடுமை


தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்திட தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமூகத்தில் உள்ள மிக முக்கியமான பிரச்சனை தாழ்த் தப்பட்ட, ஆதிதிராவிட மக்களின் பிரச்சனையாகும். அந்த மக்களின் பிரச்சனைகளை தீர்க்க அரசு முன்னுரிமை கொடுக்கும் என்று கூறியிருப்பது பாராட்டுக்குரியதாகும்.

கடந்த ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு என்று மத்திய அரசு சிறிய நிதி ஒதுக்கியது.

இந்த நிதியைக் கூட தமிழ்நாட்டில் அந்த அரசு முழுமையாக பயன் படுத்தாமல் திருப்பி அனுப்பியுள்ளது. இது வருத்தத்துக்குரியதாகும்.

மேலும் அந்த மக்களுக்கு சிறப்புக்கூறு திட்டத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்காமல் தொடர்ந்து கடந்த கால ஆட்சியில் புறக்கணிக் கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்றைக்கும் பல வடிவங்களில் தீண்டாமைக் கொடுமை இருக்கிறது. நூற்றுக்கணக்கான ஆலயங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைய முடியாது என்கிற சமூக அநியாயம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்தப் பிரச்சனையிலும் அரசு தலையிட்டு உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு ஆதிதிராவிட மக்களுக்கு வழிபாட்டு உரிமையை பெற்றுத் தரவேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்.

(ஆளுநர் உரைக்கு நன்றி தெரி வித்து சட்டப்பேரவையில் கே.பாலகிருஷ்ணன்)

No comments:

Post a Comment